Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் பாதையை மேம்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

மண் பாதையை மேம்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

மண் பாதையை மேம்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

மண் பாதையை மேம்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 16, 2024 02:08 AM


Google News
உடுமலை;ஒட்டுக்குளத்தின் கரைகளை வலுப்படுத்தி, கரையிலுள்ள மண்பாதையையும் மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட ஒட்டுக்குளம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் அருகில், 90 ஏக்கர் நீர் பரப்பில், இக்குளம் அமைந்துள்ளது.

குளத்து கரையிலுள்ள மண்பாதையை அப்பகுதி விவசாயிகளும், சுண்டாக்கம்பாளையம் உட்பட கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாதையை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கரையும் ஆங்காங்கே சரிந்து வருகிறது.

மழை நீரால் கரையில் ஏற்பட்ட மண் அரிப்பால், ஷட்டர்கள் அமைந்துள்ள பகுதியில், கரை குறுகலாக மாறியுள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், சில இடங்களில் குழி ஏற்பட்டு, மண் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால், குளத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவ்வழியாக வாகனங்களும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே, பொதுப்பணித்துறையினர், ஒட்டுக்குளத்தின் கரைகளை சீரமைத்து, மண் பாதையையும் மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us