Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓடும் காரில் தீ விபத்து உயிர் தப்பிய குடும்பத்தினர்

ஓடும் காரில் தீ விபத்து உயிர் தப்பிய குடும்பத்தினர்

ஓடும் காரில் தீ விபத்து உயிர் தப்பிய குடும்பத்தினர்

ஓடும் காரில் தீ விபத்து உயிர் தப்பிய குடும்பத்தினர்

ADDED : ஜூலை 23, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
அவிநாசி:அவிநாசி அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் தீ பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிர் தப்பினர்.

கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த மார்ட்டின் பிலோமின்ராஜ் 48. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேலத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் கேரளா நோக்கி, நேற்று காலை காரில் திரும்பி கொண்டிருந்தார்.

அவிநாசி, பழங்கரை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் முன் பக்கத்தில் இருந்து புகை வந்ததை கவனித்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அனைவரும் இறங்கி தப்பினர். தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற அவிநாசி தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

---

அவிநாசி அருகே ஓடும் காரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us