ADDED : ஜூலை 21, 2024 11:36 PM
திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன், கார், ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேசன், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தனர். 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 145 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மாவட்ட டூரிஸ்ட் வேன், கார், ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் சங்க தலைவர் சண்முகவேல், செயலாளர் சேகர், பொருளாளர் துர்காராம் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.