Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

ADDED : ஜூலை 07, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
பல்லடம்:திருப்பூர் வடக்கு மாவட்ட த.மா.கா., சார்பில் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நகர தலைவர் முத்துக்குமாரசாமி வரவேற்றார். வட்டாரத் தலைவர்கள் சின்னசாமி, ஜெகதீசன், ராமசாமி, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்டில் ஜவுளி பூங்கா அமைத்தல் மற்றும் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் பல்லடம் விவசாயிகளுக்கு உடனடியாக உழவர் அட்டை வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஜூலை 14 அன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில்

வடக்கு மாவட்டம் சார்பாக, 500க்கும் மேற்பட்டவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us