ADDED : ஜூலை 31, 2024 01:06 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூர், காந்தி நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி.
இவரின் மகன் கவுதம், 30. தனியார் மருத்துவமனையில் டாக்டர். கடந்த, 29ம் தேதி பைக்கில் கோவை சென்றுவிட்டு, திருப்பூர் திரும்பி கொண்டிருந்தார். ஈட்டிவீரம்பாளையம் அருகே திடீரென்று நிறுத்தப்பட்ட வேன் மீது, பைக் மோதியது. இதில், படுகாயம் அடைந்த கவுதம், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.