ADDED : ஜூன் 20, 2024 04:57 AM
திருப்பூர் திருப்பூரில், வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
திருப்பூர், பாளையக்காடு, ஆர்.எஸ்., புரத்தை சேர்ந்த ஒருவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில், மற்றொருவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றனர். அவரின் வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வருகிறார்.
அந்த நாய், நிறுவனம், வீடு முன்பு அசுத்தம் ஏற்படுத்தி வந்தது. இதுதொடர்பாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், இருதரப்பினரிடையே எழுந்த தகராறில் பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.