Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெங்களூரு ரயிலை பழநி வரை நீடிக்கணும்; பயணிகள் நல சங்கம் வலியுறுத்தல்

பெங்களூரு ரயிலை பழநி வரை நீடிக்கணும்; பயணிகள் நல சங்கம் வலியுறுத்தல்

பெங்களூரு ரயிலை பழநி வரை நீடிக்கணும்; பயணிகள் நல சங்கம் வலியுறுத்தல்

பெங்களூரு ரயிலை பழநி வரை நீடிக்கணும்; பயணிகள் நல சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஆக 01, 2024 12:42 AM


Google News
உடுமலை : பெங்களூரு - கோவை ரயிலை, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநி வரை நீடிக்க வேண்டும், என கோவை - திண்டுக்கல் ரயில்வே பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவையிலிருந்து, திண்டுக்கல் வரையிலுள்ள, கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலுள்ள பயணிகள் நலச்சங்கங்கள் இணைந்து, கோவை - திண்டுக்கல் வழித்தட ரயில் பயணிகள் நல சங்கங்கள் இணைந்து அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு கூட்டம், உடுமலை, தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நடந்தது. இதில், கோவை -- தாம்பரம் - - கோவை வாராந்திர ரயில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயிலை, பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும்.

கோவை -- மதுரை ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் இரண்டு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக, கோவை -- ராமேஸ்வரம் ரயிலாக இயக்க வேண்டும்.

மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக, திண்டுக்கல் -- கோவை மெமு ரயிலை காலை , மாலை என இரு நேரங்களில் இயக்க வேண்டும்.

மேலும், பெங்களூர் -- கோவை ரயிலை பொள்ளாச்சி வழியாக பழநி வரை நீடிக்கவும், மதுரை -- திருப்பதி ரயிலை, பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக இயக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரயில் பயணிகள் நல சங்க தலைவர் தேவதாஸ், செயலாளர் சிவமோகன், பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us