/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'குறைந்தது 5 மரக்கன்று நட வேண்டும்' 'குறைந்தது 5 மரக்கன்று நட வேண்டும்'
'குறைந்தது 5 மரக்கன்று நட வேண்டும்'
'குறைந்தது 5 மரக்கன்று நட வேண்டும்'
'குறைந்தது 5 மரக்கன்று நட வேண்டும்'
ADDED : ஜூன் 05, 2024 11:10 PM

திருப்பூர் : மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் வடக்கு, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில், நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
'மனிதர்களை வாழ வைக்கும், இயற்கையை பாதுகாக்க ஒவ்வொருவரும் தவறக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஐந்து மரக்கன்றாவது நட வேண்டும்; பருவநிலை காரணமாக, தற்போது வெப்பம் அதிகரிக்கிறது; எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை பயன்படுத்த முன்வர வேண்டும்,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
உதவி பொறியாளர் திப்பு சுல்தான் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் விளைவுகளை விளக்கினார். சுற்றுச்சூழல் குறித்து, மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நவின்குமார், ரேவதி, ஜெயலட்சுமி, கயல்விழி, ஜெயசந்திரன், சுந்தரம், விஜய், ராஜபிரபு ஆகியோர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
அதன்பின், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரம், மஞ்சப்பை வழங்கினர்.