ADDED : ஜூலை 02, 2024 01:37 AM
பொங்கலுார்:பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி பணி நிறைவு பெற்றார்.
அவருக்கு பாராட்டு விழாவில், உகாயனுார் ஊராட்சி தலைவி ரேவதி, முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரத்தினசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணவேணி ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.