/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இருநுாறு ஆண்டு ஆல மரம் இருப்பது கூட பொறுக்கலையா! இருநுாறு ஆண்டு ஆல மரம் இருப்பது கூட பொறுக்கலையா!
இருநுாறு ஆண்டு ஆல மரம் இருப்பது கூட பொறுக்கலையா!
இருநுாறு ஆண்டு ஆல மரம் இருப்பது கூட பொறுக்கலையா!
இருநுாறு ஆண்டு ஆல மரம் இருப்பது கூட பொறுக்கலையா!
ADDED : ஜூன் 11, 2024 12:46 AM

அவிநாசி;அவிநாசி அருகே இருநுாறு ஆண்டு ஆலமரத்தை வெட்டி வீழ்த்த முயன்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, கந்தம்பாளையத்தில் வசித்து வருபவர் சோமசுந்தரம். நேற்று இவரது வீட்டுக்கு அருகே புறம்போக்கு நிலத்தில், 200 ஆண்டு பழமையான ஆலமரத்தை எந்தவித அனுமதியுமின்றி வெட்டிக்கொண்டிருந்தார்.
அப்பகுதியை சேர்ந்த பசுமை ஆர்வலர் ஜெகநாதன் என்பவர், சோமசுந்தரத்திடம் இதுகுறித்து கேட்டதற்கு, அவரை மிரட்டியதோடு திட்டி உள்ளார். இதனால், அவர் தாசில்தார் மோகனன், செம்பியநல்லுார் வி.ஏ.ஓ., சுதாகர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.
அங்கு சென்ற வி.ஏ.ஓ., சுதாகரிடம், மரத்தை வெட்டிய சோமசுந்தரம், ''எத்தனை அரசு அதிகாரிகள் வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது,'' என கூறியுள்ளார். இருப்பினும், மரத்தை வெட்டக்கூடாது என வி.ஏ.ஓ., அறிவுறுத்தி சென்றார்.
ஜெகநாதன் கூறுகையில், ''200 ஆண்டாக ஆலமரம் உள்ளது. பல வகை பறவை இனங்கள் கூடு கட்டியும் வாழ்ந்து வந்த ஆலமரத்தை அனுமதியில்லாமல் வெட்டியுள்ளனர். அதனை கேட்டதற்கு, தகாத வார்த்தையால் திட்டி மிரட்டுகிறார். சோமசுந்தரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வி.ஏ.ஓ, சுதாகர் கூறுகையில், ''ஆல மரத்தை வெட்டுவதற்கு வருவாய் துறையில் யாரும் அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து தாசில்தாரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மரத்தை வெட்டிய சோமசுந்தரம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அவிநாசி பகுதியில் இதேபோன்று பல இடங்களில் தொடர்ந்து 'மரக்கொலை'கள் நடந்த வண்ணம் உள்ளன. அதிகாரிகள் மரத்தை வெட்டிக் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்ஒழிய பிரச்னைக்கு தீர்வு இல்லை.