ADDED : ஜூன் 03, 2024 11:54 PM
உடுமலை;உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் அமைந்துள்ள உடுமலை வழியாக, தினமும் நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இங்கு முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் நுாற்றுக்கணக்காேனார் வருகின்றனர்.
ரயில் பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.