/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு இரு தாலுகாவில், 7,520 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு இரு தாலுகாவில், 7,520 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு இரு தாலுகாவில், 7,520 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு இரு தாலுகாவில், 7,520 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு இரு தாலுகாவில், 7,520 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
ADDED : ஜூன் 25, 2024 01:30 AM

உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அணையிலிருந்து வழக்கமாக, ஜூன் முதல் வாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில், கடந்தாண்டு பருவ மழைகள் குறைந்தது மற்றும் நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை தாமதம் காரணமாக, அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், அணை நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்தில், 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடி பணி மேற்கொள்ளும் வகையில், தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. அமராவதி பாசன திட்ட கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன், செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர், பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர்கள் அரவிந்த், தீனதயாளன், ஞானசேகர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அணையிலிருந்து நேற்று முதல், வரும் நவ., 6 வரை, 135 நாட்களில், 80 நாட்கள் நீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், 2,074 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும். நேற்று, வினாடிக்கு, 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படும்,' என்றனர்.
அணை நீர்மட்டம்
நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 52.30 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 1,291.84 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 289 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்கு, 200 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் கோரிக்கை
பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், மேலும், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் தாலுகாவில், 10 வலது கரை பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்கள் வாயிலாக, 21,717 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், பயன்பெறும் அனைத்து வாய்க்கால்களுக்கும் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
தற்போது, ராஜவாய்க்கால் பாசனத்திற்கு மட்டும் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணியை விரைந்து முடித்து, உயிர்த்தண்ணீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.