Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் மோதியதில் 2 தொழிலாளர் பலி

ரயில் மோதியதில் 2 தொழிலாளர் பலி

ரயில் மோதியதில் 2 தொழிலாளர் பலி

ரயில் மோதியதில் 2 தொழிலாளர் பலி

ADDED : ஜூலை 02, 2024 12:16 AM


Google News
திருப்பூர்;திருப்பூரில், ரயில் மோதிய விபத்தில், இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் காலேஜ் ரோடு, சலவைபட்டறை அருகே ரயில்வே தண்டவாளத்தில் அதிகாலை, இரு வாலிபர் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

அதில், திருவாரூரை சேர்ந்த ராஜ்குமார், 28, சரவணபவா, 27 என்பது தெரிந்தது. இருவரும் திருப்பூர், காவிலிபாளையம் புதுாரில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தது தெரிந்தது. இருவரும் டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு, இயற்கை உபாதையை கழிக்க, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. விபத்து குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us