Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ வகுப்பில் போதைப்பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

வகுப்பில் போதைப்பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

வகுப்பில் போதைப்பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

வகுப்பில் போதைப்பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

ADDED : ஜூலை 18, 2024 02:34 AM


Google News
வாணியம்பாடி,:வாணியம்பாடி அருகே, வகுப்பறையில், போதைப்பொருள் பயன்படுத்திய, 7 மாணவர்கள் ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், மாணவர்கள் சிலரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே, வகுப்பு ஆசிரியர், மாணவர்களின் புத்தகப் பையை சோதனையிட்டார்.

அப்போது, ஏழு மாணவர்கள், போதைப் பொருட்களான கஞ்சா, கூல் லிப்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம், வகுப்பு ஆசிரியர் புகார் தெரிவித்தார். அதன்படி, அந்த மாணவர்களையும் ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்து, தலைமை ஆசிரியர் நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us