Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தாமிரபரணியில் மூழ்கிய வாலிபர் பலி; மூவர் மீட்பு

தாமிரபரணியில் மூழ்கிய வாலிபர் பலி; மூவர் மீட்பு

தாமிரபரணியில் மூழ்கிய வாலிபர் பலி; மூவர் மீட்பு

தாமிரபரணியில் மூழ்கிய வாலிபர் பலி; மூவர் மீட்பு

ADDED : ஜூன் 01, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கோவில் வருஷாபிஷேக விழாவிற்காக தீர்த்தம் எடுக்க தாமிரபரணி ஆற்றுக்கு நேற்று சென்றனர். முக்காணி ஆற்றுப்பாலம் பகுதியில் அவர்கள் ஆற்றில் இறங்கியபோது திடீரென ஏற்பட்ட சுழலில் கோகுல், 18, என்ற வாலிபர் சிக்கினார். அவரை காப்பாற்ற சென்ற மூன்று வாலிபர்களும் சுழலில் சிக்கியதால், அவர்களை கிராம மக்கள் மீட்டனர்.

நீரில் மூழ்கி, கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். கோகுலின் உடலை வாங்க மறுத்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி பகுதி தாரங்கதாரா கெமிக்கல் தொழிற்சாலைக்கு ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் ஏற்பட்ட சுழலால், கோகுல் உயிரிழந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us