Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு '22 ஆண்டு'

போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு '22 ஆண்டு'

போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு '22 ஆண்டு'

போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு '22 ஆண்டு'

ADDED : செப் 17, 2025 01:15 AM


Google News
துாத்துக்குடி:போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி, 29, என்பவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கின் விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பிரீத்தா குற்றம்சாட்டப்பட்ட மாடசாமிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us