Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

ADDED : ஜூன் 19, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து வேலாயுதபுரம் அருகே மாலை 4:05 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கல் வீசினர்.

இதில், சி - 16 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகே கண்ணாடி சேதமடைந்த விபரம் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தெரிந்தது.

ரயில்வே பாதுகாப்பு போலீசார், கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us