Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ 'பாலித்தீன் பைகளை உற்பத்தி செய்யும் இடத்தில் தடை செய்ய வேண்டும்'

'பாலித்தீன் பைகளை உற்பத்தி செய்யும் இடத்தில் தடை செய்ய வேண்டும்'

'பாலித்தீன் பைகளை உற்பத்தி செய்யும் இடத்தில் தடை செய்ய வேண்டும்'

'பாலித்தீன் பைகளை உற்பத்தி செய்யும் இடத்தில் தடை செய்ய வேண்டும்'

ADDED : ஜூன் 27, 2025 03:19 AM


Google News
துாத்துக்குடி:'பாலித்தீன் பைகளை உற்பத்தி செய்யும் இடத்தில் தடை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின், அதன் மாநில தலைவர் கொளத்துார் ரவி கூறியதாவது:

மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி ஆகியவை உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றைக் குறைக்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

வணிகர் நல வாரியத்தை, வணிகர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு இடங்களில் சமூகவிரோதிகளால் வணிகர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இதில், பாதிக்கப்படும் வணிகர்களுக்கு முறையான நிதியுதவி வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வணிகர்களை காவல்துறை கைது செய்கின்றனர். அந்த, பொருட்களை உற்பத்தி செய்கிற இடத்திலேயே தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us