Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தி.மு.க., இளைஞரணி நிர்வாகி  வன்கொடுமை சட்டத்தில் 'கம்பி'

தி.மு.க., இளைஞரணி நிர்வாகி  வன்கொடுமை சட்டத்தில் 'கம்பி'

தி.மு.க., இளைஞரணி நிர்வாகி  வன்கொடுமை சட்டத்தில் 'கம்பி'

தி.மு.க., இளைஞரணி நிர்வாகி  வன்கொடுமை சட்டத்தில் 'கம்பி'

ADDED : அக் 16, 2025 02:10 AM


Google News
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் மகன் சிவராஜன், 32, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், நகராட்சி கழிவறைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்துகிறார். இவரிடம் வேலை பார்த்த, சின்னதம்பி, 39, என்பவர், சில நாட்களாக பணிக்கு வரவில்லை.

அவரது வீட்டிற்கு சென்ற சிவராஜன், சின்னதம்பியை அவதுாறாக பேசியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சின்னதம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்செந்துார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

சிவராஜன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us