Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கடனை திரும்ப கேட்ட நண்பனை வெட்டிய தி.மு.க., நிர்வாகி கைது

கடனை திரும்ப கேட்ட நண்பனை வெட்டிய தி.மு.க., நிர்வாகி கைது

கடனை திரும்ப கேட்ட நண்பனை வெட்டிய தி.மு.க., நிர்வாகி கைது

கடனை திரும்ப கேட்ட நண்பனை வெட்டிய தி.மு.க., நிர்வாகி கைது

ADDED : ஜூன் 26, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
முத்தையாபுரம்:துாத்துக்குடி அருகே கடனை திருப்பிக்கேட்ட நண்பரை, அரிவாளால் வெட்டிய தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், நேசமணி நகரைச் சேர்ந்தவர் பொன் கற்பகராஜ், 31; ஓட்டப்பிடாரம், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். இவரது நண்பரான ஆத்துார், ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த பாலஜெகதீஷிடம், 50,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதில், 20,000 ரூபாயை திருப்பி செலுத்திய நிலையில், மீதமுள்ள, 30,000 ரூபாயை கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், பாலஜெகதீஷும், அவரது நண்பர் ஏசுராஜ் என்பவரும், பொன் கற்பகராஜ் வீட்டிற்கு சென்று கடனை திரும்பக் கேட்டனர்.

இதில், ஆத்திரமடைந்த பொன் கற்பகராஜ், அரிவாளால் இருவரையும் வெட்டினார். கையில் வெட்டுக்காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முத்தையாபுரம் போலீசார், பொன் கற்பகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது, ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us