Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தண்ணீர் பிடித்த போது பரிதாபம்; கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

தண்ணீர் பிடித்த போது பரிதாபம்; கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

தண்ணீர் பிடித்த போது பரிதாபம்; கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

தண்ணீர் பிடித்த போது பரிதாபம்; கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

ADDED : ஜூன் 23, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி: துாத்துக்குடியில் இருந்து திருச்செந்துார் சாலையில் அமைந்துள்ள முக்காணி சாலையோரத்தில் இருந்த குடிநீர் குழாயில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலை 6:30 மணிக்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த 'இன்னோவா' கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்ற பெண்கள் மீது மோதியது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த நட்டார் சாந்தி, 50; பார்வதி, 35; அமராவதி, 58, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சண்முகத்தாய் என்பவர் படுகாயமடைந்தார். அவர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆத்துார் போலீசார் மூன்று பெண்களின் உடல்களை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஏரல், பெருங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர்.

முக்காணி பகுதி ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. போதிய வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. எனவே, தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மூவர் குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், சண்முகத்தாய்க்கு 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us