Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஒரு மாதத்தில் திரும்ப தந்து விடுகிறேன்: திருடிய வீட்டில் கடிதம் எழுதி வைத்த திருடன்

ஒரு மாதத்தில் திரும்ப தந்து விடுகிறேன்: திருடிய வீட்டில் கடிதம் எழுதி வைத்த திருடன்

ஒரு மாதத்தில் திரும்ப தந்து விடுகிறேன்: திருடிய வீட்டில் கடிதம் எழுதி வைத்த திருடன்

ஒரு மாதத்தில் திரும்ப தந்து விடுகிறேன்: திருடிய வீட்டில் கடிதம் எழுதி வைத்த திருடன்

ADDED : ஜூலை 04, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சித்திரை செல்வின், 68. இவர், சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக, தன் மனைவியுடன், கடந்த 17ம் தேதி சென்னை சென்றார். வீட்டை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் வீட்டு சாவியை கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய செல்வி சென்றபோது, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கும், சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார்.

மெஞ்ஞானபுரம் போலீசார் போனில் சித்திரைசெல்வினை தொடர்புகொண்டு பீரோவில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விபரங்களை கேட்டனர். பீரோவில் வைத்திருந்த 60,000 ரூபாய், 1.5 சவரன் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனையிட்டதில், கொள்ளையன் பச்சை நிற மை பேனாவால், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், 'என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்' என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us