Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் கோவிலில் தங்கத்தேர் பவனி நிறுத்தம்

திருச்செந்துார் கோவிலில் தங்கத்தேர் பவனி நிறுத்தம்

திருச்செந்துார் கோவிலில் தங்கத்தேர் பவனி நிறுத்தம்

திருச்செந்துார் கோவிலில் தங்கத்தேர் பவனி நிறுத்தம்

ADDED : ஜூலை 12, 2024 11:17 PM


Google News
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிரி பிரகாரத்தில் தரைதள பணி நடக்க உள்ளது. இதனால், வரும் 17ம் தேதி முதல் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் மாலை 6:00 மணிக்கு தங்கத்தேர் பிரகாரம் சுற்றி வருவது வழக்கம். தற்போது, கோவிலில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணி நடந்து வருகிறது.

கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு கோவிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணி நடக்க உள்ளது. திருவிழாவிற்கு பிறகு கோவிலின் தெற்கு மற்றும் மேற்கு பிரகார தரைத்தளம் பணி நடக்க உள்ளது.

இப்பணிகளால், வரும் 17ம் தேதி முதல், தங்க தேர் புறப்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கத்தேர் புறப்பாடு வழக்கம் போல் நடத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us