Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ விதவை சான்றிதழ் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

விதவை சான்றிதழ் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

விதவை சான்றிதழ் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

விதவை சான்றிதழ் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

ADDED : ஜூலை 10, 2024 09:46 PM


Google News
ஏரல்:ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லுாரைச் சேர்ந்த மகாராஜா மனைவி முத்துமாரி. இவர் ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனு எழுதிக் கொடுத்து வரும் மாங்கொட்டபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முகராஜா, தான் விதவை சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி முத்துமாரியிடம் கூறியுள்ளார்.

இதற்காக அவர் முத்துமாரியிடம் ரூ.5,500 வாங்கியுள்ளார். பணம் கொடுத்து சில நாட்கள் ஆகியும் முத்துமாரிக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துமாரி ஏரல் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகராஜாவை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us