/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 05, 2025 09:56 PM
பொன்னேரி:சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் விரைவு ரயில், நேற்றிரவு 7:30 மணிக்கு, சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சென்றது.
இந்த மார்க்கத்தில், பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ஒருவர், விரைவு ரயிலில் சிக்கினார்.
இதில், பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.