Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரி மோதி வாலிபர் மரணம்

லாரி மோதி வாலிபர் மரணம்

லாரி மோதி வாலிபர் மரணம்

லாரி மோதி வாலிபர் மரணம்

ADDED : செப் 14, 2025 02:49 AM


Google News
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சி பரேஸ்புரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 23. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன், கூளூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார்.

பின், சந்தோஷ் 'ஹோண்டா ஷைன்' பைக்கில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கூளூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருத்தணி நோக்கி வந்த லாரி சந்தோஷ் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சந்தோஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us