ADDED : ஜூன் 13, 2025 09:39 PM
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாத்குமார், 24. கும்மிடிப்பூண்டி அருகே பாத்தப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், கடந்த ஒரு மாதமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் 25 அடி உயரத்தில் மேற்கூரை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தவறி விழுந்தவர் படுகாயமடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.