Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

ADDED : மே 19, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
ஆவடி:ஆவடி அடுத்த அய்யங்குளம், ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 38. இவரது தங்கை லட்சுமி, 35; மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சில நாட்களாக, அவர் சரியாக மருந்து சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல வீட்டில் உள்ள உறை கிணற்றின் சுவரின் மீது அமர்ந்திருந்த லட்சுமி, தவறி உள்ளே விழுந்துள்ளார்.

தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி, கயிறு கட்டி லட்சுமியை பத்திரமாக மீட்டு, மேலே கொண்டு வந்தனர்.பலத்த காயமடைந்த லட்சுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us