Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஸ்வீட் கடை நடத்துவதில் தகராறு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

ஸ்வீட் கடை நடத்துவதில் தகராறு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

ஸ்வீட் கடை நடத்துவதில் தகராறு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

ஸ்வீட் கடை நடத்துவதில் தகராறு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

ADDED : செப் 02, 2025 12:31 AM


Google News
திருவள்ளூர், திருவள்ளூர் பகுதியில் ஸ்வீட்ஸ் கடை நடத்துவதில் ஏற்பட்ட போட்டி காரணாக பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 47. இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக திருவள்ளூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்வீட்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு அருகில் சந்தோஷ் என்பவரும் ஸ்வீட்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இருவருக்கும் கடை நடத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி சரவணன் மனைவி ராதிகா, 38 கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கடைக்கு வந்த சந்தோஷ், 27, அவரது மனைவி மெர்லின், 25 மற்றும் உறவினர்கள் ராதிகாவை கடையை காலி செய்யச் சொல்லி மிரட்டி ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் சரவணன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us