Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குழாய் உடைந்து குடிநீர் வீண் நகராட்சி நிர்வாகம் விழிக்குமா?

குழாய் உடைந்து குடிநீர் வீண் நகராட்சி நிர்வாகம் விழிக்குமா?

குழாய் உடைந்து குடிநீர் வீண் நகராட்சி நிர்வாகம் விழிக்குமா?

குழாய் உடைந்து குடிநீர் வீண் நகராட்சி நிர்வாகம் விழிக்குமா?

ADDED : மார் 26, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
ஈக்காடு,:திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 65,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும், 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உட்பட, 13 இடத்தில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கடந்த 2004ல், வெள்ளியூரில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கிருந்து, தினமும், 35 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுக்கப்பட்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு பெறப்படும் குடிநீர், நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட, 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து, தெரு குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்பு குழாய்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈக்காடு அருகே பூண்டி - புழல் கிருஷ்ணா கால்வாய் குறுக்கே செல்லும் இரும்பு குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. இதனால், திருவள்ளூர் நகராட்சிக்கு போதுமான குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நகராட்சி நிர்வாகம், ஈக்காடு அருகே சேதமடைந்த குழாய் உடைப்பை சீரமைத்து, குடிநீர் முழுதும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us