Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடி பேரூராட்சி சமுதாய கூடம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

கும்மிடி பேரூராட்சி சமுதாய கூடம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

கும்மிடி பேரூராட்சி சமுதாய கூடம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

கும்மிடி பேரூராட்சி சமுதாய கூடம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

ADDED : ஜூன் 19, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சமுதாய கூடத்தில் சமையல் அறை, டைனிங் ஹால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே சமுதாய கூடம் உள்ளது. மணமேடை, கழிப்பறையுடன் மணமகன் மற்றும் மணமகள் அறைகள், பார்வையாளர் அரங்கு, வெளிப்புறத்தில் தனியாக கழிப்பறைகள் உள்ளன.

சமையல் அறை, டைனிங் ஹால் வசதி இல்லாததால், திருமண விழாக்கள் இங்கு நடைபெறுவது இல்லை. சில மணி நேரம் நடக்கும் கட்சி, சங்க கூட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

சமுதாய கூடம் முறையான பராமரிப்பின்றி இருப்பதால், எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எனவே, தனியாக சமையல் அறை, முதல் தளத்தில் டைனிங் ஹால் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி முறையாக பராமரித்தால், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறும். அதன் வாயிலாக எளிய மக்களும் நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us