Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணி கோவிலில் வள்ளி திருமணம்

திருத்தணி கோவிலில் வள்ளி திருமணம்

திருத்தணி கோவிலில் வள்ளி திருமணம்

திருத்தணி கோவிலில் வள்ளி திருமணம்

ADDED : பிப் 23, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
திருத்தணி:முருகன் கோவிலில் நேற்று நடந்த பிரம்மோற்சவ விழாவில், வள்ளி திருக்கல்யாணம் நடந்தது.

திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான், கேடயம், பல்லாக்கு, அன்னம், வெள்ளிமயில், யானை, பூதம், சிம்மம், சந்திரபிரபை போன்ற பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவு நேரத்தில் மாடவீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.

இம்மாதம், 21ம் தேதி மாலை மரத்தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்திலும் உலா வந்தார்.

நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல், பச்சைமாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கத்துடன் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us