Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜெ.ஜெ.கார்டன் குடிநீர் தொட்டியை பார்வையிட்ட ஒன்றிய அதிகாரிகள்

ஜெ.ஜெ.கார்டன் குடிநீர் தொட்டியை பார்வையிட்ட ஒன்றிய அதிகாரிகள்

ஜெ.ஜெ.கார்டன் குடிநீர் தொட்டியை பார்வையிட்ட ஒன்றிய அதிகாரிகள்

ஜெ.ஜெ.கார்டன் குடிநீர் தொட்டியை பார்வையிட்ட ஒன்றிய அதிகாரிகள்

ADDED : ஜூன் 04, 2025 10:16 PM


Google News
திருவள்ளூர்:பூண்டி ஒன்றியம், சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்த நகரில், 250க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்.

சிறுவானுார் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இந்நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

இந்நகரில் இரண்டு இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்தும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

மேலும், 2020 - 21ம் ஆண்டு நிதியாண்டில், ஜல் ஜீவன் திட்டத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.

ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து, வீடு மற்றும் தெருக்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நேற்று நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பூண்டி ஒன்றிய அதிகாரிகள் நேற்று, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில், குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு மோட்டார்களை இயக்கி, தொட்டியில் நீர் ஏற்றி சோதனை நடத்தினர்.

அதன்பின், ஏற்கனவே அமைக்கப்பட்ட குழாய் வழியாக குடிநீர் இயக்கவும், பிற பகுதிகளில் விரைவில் குடிநீர் குழாய் பதித்து, தண்ணீர் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us