Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

ADDED : அக் 17, 2025 07:42 PM


Google News
திருவள்ளூர்,:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களும், அதற்கு மேலான கல்வி தகுதி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

கடந்தாண்டு நவ., 30ம் தேதி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து, வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர், 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

மாதந்தோறும், 10ம் வகுப்பு தோல்விக்கு 200 ரூபாய், 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு 300 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சிக்கு 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாய் என, மூன்று ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வந்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us