Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இருவர் பலி; இருவர் கவலைக்கிடம்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இருவர் பலி; இருவர் கவலைக்கிடம்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இருவர் பலி; இருவர் கவலைக்கிடம்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இருவர் பலி; இருவர் கவலைக்கிடம்

ADDED : செப் 07, 2025 10:20 PM


Google News
திருத்தணி:திருத்தணி அருகே, பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நகரி அடுத்த தடுக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், திருத்தணி அடுத்த மங்காபுரம் காலனியைச் சேர்ந்த எழிலரசி, 24, என்பவரை திருமணம் செய்து, அங்கேயே வசித்து வருகிறார்.

நேற்று இரவு 7:30 மணிக்கு தினேஷ், மங்காபுரம் காலனியைச் சேர்ந்த ஆகாஷ், 21, என்பவருடன் 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில், மத்துார் ரயில்வே கேட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். மத்துார் தனியார் பைப் கம்பெனி அருகே சென்ற போது, எதிரே மற்றொரு 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில், மத்துார் பெரியார் நகரைச் சேர்ந்த கோவிந்தன், 27, என்பவர் அதிவேகமாக வந்து நேருக்கு நேர் மோதினார்.

இதில், தினேஷ், கோவிந்தன் ஆகியோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆகாஷ், 21, மற்றும் விபத்து நடந்த இடத்தில், சாலையோரம் நடந்து சென்ற தடுக்குப்பேட்டையைச் சேர்ந்த முனிரத்தினம், 66, என்பவரும் படுகாயமடைந்தனர்.

அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us