Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விரைவு ரயிலில் அடிபட்டு பட்டாபிராமில் இருவர் பலி 

விரைவு ரயிலில் அடிபட்டு பட்டாபிராமில் இருவர் பலி 

விரைவு ரயிலில் அடிபட்டு பட்டாபிராமில் இருவர் பலி 

விரைவு ரயிலில் அடிபட்டு பட்டாபிராமில் இருவர் பலி 

ADDED : ஜூன் 15, 2025 08:31 PM


Google News
ஆவடி:திருவண்ணாமலை மாவட்டம், அத்திமூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு, 60. திருவண்ணாமலை மாவட்டம், குன்று மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன், 42. இருவரும், பட்டாபிராம் அடுத்த வயலாநல்லுார் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர்.

நேற்று மாலை, பட்டாபிராம் காய்கறி சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி, இருவரும் வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது, பட்டாபிராம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்த போது, சென்னையில் இருந்து ஹூப்ளி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us