/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி
லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி
லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி
லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி
ADDED : செப் 16, 2025 12:56 AM

மாதவரம்;மாதவரம் சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால், லாரி ஓட்டுநர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில், தினமும் 800க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இங்கு, ஓட்டுநர்கள் தங்குமிடமும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
மேலும், புழல் சிறையிலிருந்து கால்வாய் வழியே வெளியேறும் கழிவுநீரும், இந்த லாரிகள் நிறுத்த வளாகம் வழியாகவே செல்கிறது. அந்த கால்வாயில் கசிந்து வெளியேறும் கழிவுநீரும், ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், லாரியில் இருந்து கீழே இறங்க கூட முடியாமல், ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது. இதன் அருகே, மாதவரம் மண்டல அலுவலகம் செயல்பட்டு வந்தும், அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.