ADDED : பிப் 11, 2024 11:23 PM
செவ்வாப்பேட்டை : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனமணி, 65. இவர் கடந்த 7ம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது பல்சர் பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் இவரது கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்து தனமணி கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.