ADDED : பிப் 09, 2024 09:43 PM
ஆவடி:அம்பத்துார் அடுத்த பாடி, ஜெகதாம்பிகை நகர், திருவள்ளுவர் தெருவில், திருவல்லீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமாக, 2,025 சதுர அடியில் நிலம் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த நிலத்தை, கடந்த 25 ஆண்டுகளாக, ஜெகதாம்பிகை நகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
மேலும், அனுமதி பெறாமல், தனியார் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். தகவலறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் இருந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை நேற்று மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர்.