/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/'டாஸ்மாக்' ஊழியர் மயங்கி விழுந்து பலி'டாஸ்மாக்' ஊழியர் மயங்கி விழுந்து பலி
'டாஸ்மாக்' ஊழியர் மயங்கி விழுந்து பலி
'டாஸ்மாக்' ஊழியர் மயங்கி விழுந்து பலி
'டாஸ்மாக்' ஊழியர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜன 01, 2024 06:25 AM
பெரம்பூர்: சென்னை ராயபுரம், ஏ.ஜெ., காலனி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சுனன், 54; அவர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மதுபானங்கள் விற்பனை குறித்து, கடை ஊழியர் மணிவண்ணன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, செம்பியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.