ADDED : மார் 27, 2025 08:38 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தாராக இருந்த ராஜேந்திரன், ஊத்துக்கோட்டை தாலுகா 'டிட்கோ' சிறப்பு தாசில்தாராக, இம்மாதம், 16ம் தேதி மாற்றம் செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பொறுப்பு வகிக்கும் புகழேந்தி, கூடுதலாக கும்மிடிப்பூண்டி தாசில்தாராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், திண்டிவனம் - நகிரி புதிய அகல ரயில் பாதை திட்ட நில எடுப்பு தனி தாசில்தராக இருந்த சுரேஷ்குமார், கும்மிடிப்பூண்டி தாசில்தாராக நியமிக்கட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.