ADDED : மே 28, 2025 02:23 AM

ஊத்துக்கோட்டை:கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் சில தினங்களாக வெயில் அடிப்பது, மழை பெய்வதுமாக இருந்தது.
சில நாட்கள் குளிர்ச்சியாக இருந்தாலும், சில நாட்கள் வெயிலின் உக்கிரம் அதிகளவில் இருந்தது. நேற்று காலை முதல் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்த நிலையில், மாலை, 4:00 மணிக்கு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் துவங்கியது.
தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.