Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இணைப்பு சாலையில் திடீர் பள்ளங்கள் சிப்காட் வரும் வாகனங்கள் தடுமாற்றம்

இணைப்பு சாலையில் திடீர் பள்ளங்கள் சிப்காட் வரும் வாகனங்கள் தடுமாற்றம்

இணைப்பு சாலையில் திடீர் பள்ளங்கள் சிப்காட் வரும் வாகனங்கள் தடுமாற்றம்

இணைப்பு சாலையில் திடீர் பள்ளங்கள் சிப்காட் வரும் வாகனங்கள் தடுமாற்றம்

ADDED : ஜூன் 05, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. கனரக வாகனங்கள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை வழியாக சிப்காட் பிரதான சாலை மற்றும் ஏ.ஆர்.எஸ்., சிப்காட் சாலைக்கு செல்ல வேண்டும்.

பிரதான சாலை மற்றும் ஏ.ஆர்.எஸ்., சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், ஏராளமான இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த வாரம் பெய்த மழையின் போது, சாலையில் தண்ணீர் தேங்கி, தற்போது பள்ளமாக மாறியுள்ளது. இதனால், இரவு நேரத்தில் வரும் கனரக வாகனங்கள், திடீர் பள்ளங்களால் திக்குமுக்காடி போகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக பள்ளங்களை சமன்செய்து, பாதுகாப்பான வாகன போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us