Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துாய்மை பணியாளர் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கை

துாய்மை பணியாளர் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கை

துாய்மை பணியாளர் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கை

துாய்மை பணியாளர் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கை

ADDED : ஜூன் 07, 2025 10:49 PM


Google News
திருவள்ளூர்:துாய்மை பணியாளர் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக சேர்க்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் துாய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டம் 2013-ன் படி, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின், 2025 - 27ம் ஆண்டு வரை, இரண்டு ஆண்டிற்கான அலுவல் சாரா உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சமூக ஆர்வலர் மற்றும் அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தங்களது சுயவிபரம் அடங்கிய விண்ணப்பத்தை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us