Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு இல்லாத குளம் புத்துயிர் அளிக்க கோரிக்கை

பராமரிப்பு இல்லாத குளம் புத்துயிர் அளிக்க கோரிக்கை

பராமரிப்பு இல்லாத குளம் புத்துயிர் அளிக்க கோரிக்கை

பராமரிப்பு இல்லாத குளம் புத்துயிர் அளிக்க கோரிக்கை

ADDED : செப் 10, 2025 09:42 PM


Google News
கும்மிடிப்பூண்டி:குருவிஅகரம் கிராமத்தில் முறையான பராமரிப்பின்றி சீரழிந்து வரும் குளத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சியில் குருவிஅகரம் கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு நடுவே, 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த குளம் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, குளத்து தண்ணீரை கிராம மக்கள் பயன் படுத்தி வந்தனர்.

ஊராட்சி நிர்வாகமும், சுற்றியுள்ள குடியிருப்பு மக்களும் குளத்தை முறையாக பராமரிக்க தவறியதால், தற்போது மாசடைந்துள்ளது.

குளத்தின் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, கழிவுகள் கொட்டியதால் மாசடைந்த குளத்தை துார்வாரி, தடுப்புச்சுவர் அமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us