/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கைவிளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை
விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை
விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை
விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 04, 2024 09:06 PM

கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்டது அரும்பாக்கம் ஊராட்சி. இங்கு, சுடுகாடு அருகே ஆற்காடு குப்பம் செல்லும் சாலையில், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், 2019 - 20ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வாயிலாக 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் மற்றும் இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓராண்டாக இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாத நிலையில் தற்போது துருப்பிடித்தும் மைதானத்தில் செடி முளைத்து புதராக காட்சியளிக்கிறது.
இதனால் சிறுவர் - - சிறுமியர் விளையாட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் சிறுவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.