Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

ADDED : ஜன 08, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் ஊராட்சி, குன்னத்துார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஊராட்சி நிர்வாகம், கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் மகளிர் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

ஆரம்பத்தில் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சுகாதாரம் வளாகம் பழுதடைந்தது. இதையடுத்து மகளிர் பயன்படுத்தாமல் நான்கு ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது.

தொடர்ந்து, கடந்தாண்டு, 15 வது நிதிக்குழு மானியம், 2020- -21ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 2 லட்சத்து, 77 ஆயிரத்தி, 781 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஊராட்சி நிர்வாகம் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் ஊராட்சி நிர்வாகம் பூட்டியேஉள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறந்து விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us