Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரக்கோணம் அருகே தண்டவாளம் துண்டிப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளம் துண்டிப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளம் துண்டிப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளம் துண்டிப்பு

ADDED : ஜூன் 28, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
சென்னை:அரக்கோணம் அடுத்த சித்தேரியில் தண்டவாளம் துண்டானதால், ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.

அரக்கோணத்தில் இருந்து, காட்பாடிக்கு தினமும் பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரக்கோணத்தில் இருந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு புறப்பட்ட, ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகில் செல்லும் போது, வழக்கத்திற்கு மாறாக ரயிலில் சத்தம் கேட்டது, இதையடுத்து சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து, அவர் சித்தேரி ரயில் நிலையம் மேலாளர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவம் இடத்திற்கு வந்த பணியாளர்கள் தண்டவாளம் துண்டானதை சரியும் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த ரயிலை பின்தொடர்ந்து வந்த மற்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும், விரைவு ரயிலும் நிறுத்தப்பட்டது.

இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர். உடைந்த தண்டவாளத்திற்கு முன் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us