Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கோதண்டராமர், சீதா, லட்சுமணன் உற்சவ சிலைகள் ஊர்வலம்

கோதண்டராமர், சீதா, லட்சுமணன் உற்சவ சிலைகள் ஊர்வலம்

கோதண்டராமர், சீதா, லட்சுமணன் உற்சவ சிலைகள் ஊர்வலம்

கோதண்டராமர், சீதா, லட்சுமணன் உற்சவ சிலைகள் ஊர்வலம்

ADDED : ஜூன் 08, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி ஜோதி சாமி தெருவில் பஜனை கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணி பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்தது. இன்று காலை புதிதாக கட்டப்பட்ட கோவிலில் கோதண்டராமர், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் விநாயகர் ஆகிய உற்சவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு கோவில் கோபுரத்திற்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவ சிலைகளுக்கும் கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கோவில் வளாகத்தில், ஒன்பது யாக சாலைகள் அமைத்து பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை உற்சவ சிலைகள் டிராக்டரில் வைத்து, திருத்தணி நகர வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, உற்சவர் சிலைகள் மீது மஞ்சள் நீர் ஊற்றியும், சிறப்பு பூஜைகள் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். இரவு உற்சவ சிலைகள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன.

இன்று காலை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. காலை 8:00 - 9:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us