Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தனியார் ஊழியர் பணிநீக்கம் சக ஊழியர் மீது தாக்குதல்

தனியார் ஊழியர் பணிநீக்கம் சக ஊழியர் மீது தாக்குதல்

தனியார் ஊழியர் பணிநீக்கம் சக ஊழியர் மீது தாக்குதல்

தனியார் ஊழியர் பணிநீக்கம் சக ஊழியர் மீது தாக்குதல்

ADDED : ஜூன் 17, 2025 09:33 PM


Google News
பொதட்டூர்பேட்டை,:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 37. இவர், அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் லுங்கி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

முறையாக வேலைக்கு வராததால், சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். தான் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, பாலகிருஷ்ணன் தான் காரணம் என சங்கர் நினைத்திருந்தார்.

பள்ளிப்பட்டு சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us